த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்

 
த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்-பால் லாஸ்மர்


த இண்டிபெண்டன்ட் இதழின் அச்சுவடிவ இறுதி மலர், இங்கிலாந்தில் வாழும் அதிருப்தியடைந்த சவூதிக்காரர் ஒருவருக்கு, சவூதி அரசரைக் கொல்லும் சதியில் தொடர்பிருந்ததாகக் குற்றம்சாட்டும் வலுவான புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விதழ் வெளிவந்ததைப் போன்ற அதே நேர்த்தியோடும், தாகத்தோடும் வெளியேறுகிறது.

ஒரு டிராம் நிலையத்தில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றிலிருந்து பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரப் பயணிகள் அவசரமாக முந்திக்கொண்டு பின்வாங்கும் காட்சியை வலுவான ஒளிப்படமாக, தனது இறுதி முதற்பக்கத்தில் வெளியிட்டு, அதை மறக்கமுடியாத ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. அவ்வாரம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பயங்கரவாதத்தின் கடுமையான மனநிலையை அந்த ஒளிப்படம் கச்சிதமாகப் பிரதிபலித்தது. மற்ற இதழ்கள் நிகழ்விடத்தில் காயம்பட்ட பயங்கரவாதத்தின் சந்தேகத்தை படம்பிடித்துவிட்டுச் சென்றுவிட்டன. த இண்டிபெண்டன்ட்டின் தேர்வோ, உலக நிகழ்வுகளால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் விளைவைப் பற்றிய அதன் அக்கறையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

இறுதி இதழ், முக்கியமான பொதுநலம்சார்ந்த தனிநிலைக் கட்டுரைகள் பலவற்றையும் வழக்கமான முந்தையநாள் செய்திகளையும் நன்கு வெளியிட்டிருந்தது. ஆசிரியர்கள் மாநாட்டில் ஜெர்மி கார்பின் ஆற்றிய உரையானது, இதழின் அரசியல்பிரிவுத் துணையாசிரியர் நைசல் மோரிசிடமிருந்து “உழைப்பாளரின் புரட்சியை மோசமான தேர்தல் கண்டிருக்கமுடியும்” என்னும் அரசியல் ஊகத்துக்கு நேரெதிரான கூற்றோடு சேர்ந்து வந்திருந்தால் நல்ல கவனத்தைப் பெற்றிருக்கும்.

கருத்துகள்மீதான த இண்டிபெண்டன்டின் வறட்டுத்தனமற்ற அணுகுமுறை அதை எப்போதும் உயிர்ப்புடையதாகவும், வேறுபட்டதாகவும் ஆக்கிவிடுகிறது. அதன், தன் எதிரிகளைப் போன்றதன்று; அது ஒரு கருத்தைத் தழுவுவதற்குமுன்னர், நன்கு சிந்திக்கப்பட்டதாகவும், அடிக்கடி வெல்விளிக்கு உட்பட்டதாகவும் இருக்கும், அதனுடைய நிலைப்பாடு என்னவென்பதை உங்களால் ஒருபோதும் அறியமுடியாது. தனது விளக்க உரையாளர்களின் ஆதரவுப் பிரச்சாரத்தாலும் தவறான வழிநடத்தலாலும் நடைபெறும், எடுத்துக்காட்டாக கார்டியன், இதழ்களைவிட காரிபியன் நிகழ்வை (Corbyn phenomenon) இந்த இதழ் மிகவும் ஏற்றுக்கொள்கிறது. ‘தெருவில்’ எப்போதும் சிறப்பாக உள்ள த இண்டி, கார்பியன்கால மனப்பாங்கைப் பிடித்துவிட்டது.

“உண்மையைச் சொல்வது மிகவும் கடினம்” என்பதை தான் கண்டுகொண்டதாகக் கூறிய அலாஸ்டியர் காம்ப்பெல்லின் இரண்டு பக்க நேர்காணலின் தலைப்பைப் பார்த்ததும் இது, ஏப்ரல் முதல்நாள் செய்தித்தாள்தானா என நான் சரிபார்த்துக் கொண்டதை, நான் கட்டாயம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். பிளேர் காலத்தில் நிகழ்ந்த பேரழிவுக்குப்பின்னர் நேர்காணலுக்கு ஒப்புக்கொள்ள தொடர்ந்து சுத்தமாக மறுத்துவந்த காம்ப்பெல், ஒரு பெரிய நேர்காணலை வழங்கியிருப்பது வித்தியாசமான தேர்வாகும். இருந்தபோதிலும் அது குறிப்பிடத்தக்கதே.

‘காட்டுவிலங்கு’களைப் போன்று பேசுபவர் என்னும் முத்திரைகொண்ட பிளேர், த இண்டிபெண்டன்டுக்குப் பொருத்தமானவராக இருக்கவில்லை ‘ஏனென்றால் முர்டோக்கரும், டாக்கருமே இதன் உண்மையான செலுத்துநர்கள்’ என காம்ப்பெல் கூறுகிறார்.

பாட்ரிக் குக்கூபெர் வழங்கிய ‘பாக்தாத்தில் என்ன நடக்கிறது?’ என்னும் குழப்பமான செய்திகளால் எனது மன அமைதி திரும்பவந்தது. எப்போதும் வாசிக்கத்தக்க செய்திகளை வழங்கும் குக்கூபெர்ன், மிகச்சிறந்த பிரிட்டிஷ் வெளிநாட்டுச் செய்தியாளர் ஆவார். அவர் இண்டிபெண்டன்டின் புதிய இணைய இதழோடு இணைந்திருப்பது நல்வாய்ப்பாகும். மூன்றாவது பக்கத்தில், இண்டிபெண்டன்ட் இதழின் நிறுவுகை ஆசிரிய ஆன்ட்ரூஸ் விட்மன் ஸ்மித், “கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்ட அச்சுப்பதிப்பை சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கும் தொழில்நுட்பம், எங்களை நாங்களே நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றலை வழங்கியிருக்கிறது” என அவ்விதழுக்கான அச்சுப்பதிப்புக்கான அபாயகரமான பிரச்னையை சுருக்கமாகத் தொகுத்துரைத்து இருக்கிறார்.

அழகின் கூறு

செய்தித்தாளைத் திருப்பும்போது, அச்சுப்பதிப்பின் அழிவில் தற்போதைய இணையத் தலைமுறை எதை இழக்கிறது என்னும் சிந்தனை என்னைத் தாக்கியது. இதுவே இறுதி அச்சுப்பதிப்பு என்பதனால், இது வலிமையான ஒளிப்படங்களும், வியப்பூட்டும் அச்சுக்கலையும் கொண்டதாக அழகிய கைத்திறனோடு நேர்த்தியாகவும், தூய்மையாகவும் வடிவமைக்கப்பட்டு அழகுணர்வில் மிகச்சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அதன் நிறுவனர்கள் ஆணையிட்டனர்.

எரிக் கில்லின் அச்சுக்கலை வளர்ந்துவந்திருந்த, இணையத்துக்கு முந்தைய தலைமுறையைச்சேர்ந்த நான், அச்சு வரைகலையின் தூய்மையான அழகையும் வெள்ளைத்தாளோடு உள்ள உறவின் நெருக்கத்தையும் அறிவதற்காக வாய்ப்பு தற்போதைய தலைமுறையினருக்குக் கிடைத்திருந்தால் வியப்படைவேன்.

1998ம் ஆண்டின் கோடைக்காலத்தில், த இண்டிபெண்டன்ட் இதழின் ஆசிரியர் சைமன் கெல்னர், அவ்விதழில் புலனாய்வு இதழாளராகப் பணியாற்ற வருமாறு, எனக்கு விடுத்த தொலைபேசி அழைப்பிலிருந்து அவ்விதழுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளின் இதழாளனாகவும், தொலைக்காட்சித் தயாரிப்பாளனாகவும் இருந்த எனக்கு, அந்த அழைப்பு, நாள்தோறும் தீப்பிடித்தாற் போன்ற வேலைக்கான ஞானக்குளியலாக இருந்தது. முதல்நாளில் ஒரு மணி நேரத்தில் 1000 சொற்களை விரைந்து எழுதியிருந்தது; எழுதினேன். அடுத்த மூன்று ஆண்டுகள், நான் புலானாய்வையும், பிறவற்றையும் பற்றி எழுதினேன். அது கடுமையான குத்து. ஆனால் ஊழலையும், மெத்தனத்தையும் எங்கள் வலிமையையும் மீறி, மடிமீதேறி விளையாடும் செல்லநாயைப் போலன்றி காவல்நாயாக கடித்துக் குதறினோம்.

2001ம் ஆண்டில் என் குடும்பத்தோடு இலண்டனிலிருந்து வெளியேறுவதற்காக நான் பதவி விலகினேன். ஆனால், பல மாதங்களுக்குப் பின்னர், 9/11 நிகழ்வையடுத்து அப்போதைய துணை ஆசிரியர் மைக்கேல் வில்லியம்சால் த இண்டிபெண்டன்ட் இதழில் ஞாயிற்றுக்கிழமைகளில் உதவுவதற்காக அழைக்கப்பட்டேன். இரு இதழ்களிலும் நான் பணியாற்றியபோது நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதினேன். நிதிப் பற்றாக்குறையுடைய ஞாயிற்றுக்கிழமை பதிப்புடனான எனது ஒப்பந்தம் 2007ம் ஆண்டு வரை நீடித்தது. அந்த ஒப்பந்தத்தை நான் நிறைவுசெய்யும்போது அதற்காக எழுதியதைவிட அதிகமாக அதற்கு தாள் வழங்குவதன்வழியாக சம்பாதித்திருக்கலாம். நானும், எனது கல்விப் பணியை மேம்படுத்துவதில் கவனம்செலுத்த விரும்பினேன்.

வளர்ந்த இதழியல்
த இண்டிபெண்டன்ட் இதழ்கள் இனிமையும், எளிய வேலையும் கொண்டவையன்று. பணத்திற்கு அப்பால் அதற்கேயுரிய பலவீனங்களையும் அது கொண்டிருந்தது. நான் பணியாற்றிய காலத்தில், தொலைநோக்குடைய தலைமைத்துவம், அறிவுச்சால்பு அல்லது கார்டியன் இதழுக்கு ஆலன் ரஸ்பிரிட்ஜர் வழங்கியதைப் போன்ற பொது உருவம் ஆகியவற்றை அவ்விதழ் கொண்டிருக்கவில்லை. மிக அண்மைக்காலம் வரை செய்தி ஒலிபரப்பிலோ, வேறெங்குமோ இண்டிபெண்டன்ட் ஆசிரியரின் கூற்றை மிக அரிதாகவே கேட்டிருப்பீர்கள். சிலவேளைகளில், குடும்ப அல்லது சமூகத் தொடர்புகளின் அடிப்படையில் வேலையமர்த்தங்கள் நிகழ்ந்ததாகத் தோன்றியதால், நல்ல தகுதியுடைய பணியாளர்கள் மிகவும் விரக்தியடைந்தார்கள்.

த இண்டிபெண்டன்ட் தன் வாசகர்களை மதிப்போடு நடத்தியது. அவர்களை நுண்ணறிவுடைய, பக்குவப்பட்ட தனது விவாதங்களாலும், வாதங்களாலும் மட்டுமே ஈர்க்கமுடியும் எனக் கருதியது. இவ்வணுகுமுறை, தன் வாசகர்களின் மோசமான தப்பெண்ணங்களுக்கு வெற்றுத்தீனி போடுகிற அதனுடைய போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டிருந்தது. த இண்டிபெண்டன்ட் வாசகர்கள் எதை விரும்பினார்களோ துல்லியமாக அதையே த இண்டிபெண்டன்ட்டும் விரும்பியது. இம்மரபை அதன் வலைத்தள வரைவும் பின்பற்றும் என நம்புவோம்.

வரலாற்றுணர்வும், சகிப்புத்தன்மையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் முன்னெப்போதைக் காட்டிலும் இக்காலகட்டத்தில் மிகவும் தேவைப்படுகின்றன. ஆனால், இவை தற்போதைய பல இதழ்களில் இவை இல்லை என்பது கவலையளிக்கிறது.

https://theconversation.com/the-independents-final-edition-summed-up-all-that-is-powerful-about-newsprint-56874

தமிழில்: அரிஅரவேலன்

கட்டுரையாளர் குறிப்பு- பால் லாஸ்மர்,இதழியல் முதுநிலை விரிவுரையாளர், சசெக்சு பல்கலைக்கழகம்.

https://minnambalam.com/k/2016/04/07/1459987203

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...