பாவேந்தர் மெய்ப்புகழ்



                வண்ணம்

தனனே தனன தனனே தனன
தனனே தனன தனனே தனன
தனனே தனன தனனே தனன தனதனனே



அனலே பொழியும் மொழியே இதழில்
உளதோ எனயெம் உளமே வியக்க
வளமே விளையும் ஒலியே உறையும் உளந்தனிலே

இனமே உயர எழிலே உலவ
கனலே சொரியும் கவியே தமிழில்
தினமே புனையும் திருவே எந்தம் கனகசுப்பே

புயலே எழில்மிகு  வடிவே எடுத்தெம்
புயமே துடிக்கும் படிநீ வடித்த
கவியே தமிழின் முடியே எனயாம் திளைத்தனமே

வளமே தமிழர் நலமே வியையுன்
கவியே சுவைநிறை மதுவோ? தமிழர்
மறமோ? குளிரும் புனலோ? எதுவென் றறிந்திலமே!

2 comments:

  1. புரட்சிக்கவிஞருக்கு -கவிப்
    பூமாலை சூட்டியமைக்கு
    வாழ்த்துக்கள்.
    தொடரட்டும்..உம் பணி

    ReplyDelete
  2. சந்தப்பாடல் மிகவும்ங்க அரி! இதை நீரே பாடி ஒலியேற்றம் செய்தால் மெருகேற்றியதாக இருக்கும்ங்க. செய்வீர்களா?

    ReplyDelete

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...