செம்மையாய்ச் செயல்படப் பழகுக!

1
வேலை யாதென விளங்கிக் கொள்வதும்;
வேண்டும் பொருள்களைத் திரட்டிக் கொள்வதும்;
நுண்ணிய வற்றையும் நுட்பமாய் நோக்கலும்;
அனைத்துக் கூறிலும் அக்கறை செலுத்தலும்;
நடக்கும் வேலை சரியாய் முறையாய்
நடக்கிற தாவென உறுதிப் படுத்தலும்;
அட்ட வணைப்படி அனைத்து செயல்களும்
ஆற்றப் படுதலும்; வினையது முடிந்ததும்
வினைபுரி இடத்தை தூய்மை செய்தலும்;
முடிந்த செயல்களை மீண்டும் நோக்கி
வேண்டும் மாற்றம் செய்தலும்
செம்மையாய் வேலையைச் செய்திட உதவுமே.
2
பொறுமை காத்தல்; விடாது முயலுதல்;
கடமையே கண்ணென கவனமாய் உழைத்தல்
ஆகிய பண்பினால் அடையலாம் செம்மையே!
3
சோம்பல்; மறதி; கவன மின்மை
ஆகிய மூன்றும் அடியறக் களைந்து
விடா முயற்சி; கடமை உணர்வு
பொறுமை ஆகிய மூன்றும் கொண்டால்
ஆற்றும் பணியில் அமைந்திடும் செம்மையே!
4
தணிக்கைப் பட்டியல்; கால அட்டவணை;
ஒப்பிட்டு ஆய்தல்; மீளவும் ஆய்தல்;
திட்டம் திருத்தல் ஆகிய வற்றால்
புரிந்திடும் பணியில் புலப்படும் செம்மையே!

5 comments:

  1. அருமை நண்பரே....

    ReplyDelete
  2. வலையுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

    கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள் ...

    ReplyDelete
  3. அழகான பியோசனமான விடயத்தை கவிதையில் அழகாக சொல்லிவிடீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அரியின் 'அபராஜிதா'--நன்று அறி ! நன்றி அரி !

    ReplyDelete
  5. நன்றாக உள்ளது . முதல் பாராவின் வரிகள்(அட்ட வணைப்படி அனைத்து செயல்களும்
    ஆற்றப் படுதலும்....) என் அம்மாவை நியாபக படுத்துகின்றன

    ReplyDelete

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...