நான்

கால முனைகளுக்கிடையில்
இழுபடும் வண்டி
அடிக்கடி
நினைவுக்கூரையில்
ம்
கு
ங்
தொ
காற்றாடி
சோதனைச் செருப்புக்கடியில்
கிடந்து நசுங்கும்
பூ
உணர்வு நீரின்
கொதிநிலை காக்கும்
தெர்மாசு பிளாக்சு
எல்லையறுத்துப் பறக்கும்
பறவையின்
புத்தின ஓவியம்
புதுவிடம் தேடிவிரையும்
மலையருவி
பொருள்க் கரைகளுக்கிடையில்
அசைந்து நடக்கும்
ஆறு

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...